சென்னை: நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவ லகத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஆணையர் பணீந்திர ரெட்டி, கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர்கள் மங்கையர்க்கரசி, வான்மதி, சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:
கோயில் திருப்பணிகள் தொடங்கும் முன் தொல்லியல் துறை கருத்துரு, மண்டல குழு அனுமதி, மாநில குழு அனுமதி மற்றும் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோயில்களின் திருப் பணிகளை மேற்கொள்ள உயர் நீதிமன்ற குழு அனுமதி ஆகியவற்றை விரைவாக பெற்று மதிப்பீடு தயார் செய்து பணிகளை தொடங்க வேண்டும். வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தவறு செய்யும் அலுவலர்கள் மீதும் ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.