×

திருச்சி அருகே நாட்டு வெடியை கடித்த சிறுவன் பலி.:தின்பண்டம் என நினைத்து கடித்ததால் தலை சிதறி மரணம்

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தின்பண்டம் என்று நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழந்தான். கலக்கரையை சேர்ந்த பூபதி என்பவரின் 6 வயது மகன் விஷ்ணு தேவ். இவர் வீட்டு தோட்டத்தில் மீன்களை பிடிக்க வைத்து இருந்த நாட்டு வெடிகுண்டுகளை தின்பண்டம் என்று நினைத்து சாப்பிட்டு உள்ளார். உடனடியாக பயங்கர சத்தத்துடன் தலை சிதறி விஷ்ணு தேவ் நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் சிறுவனின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால் தகவல் அறிந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர், விசாரணை மேற்கொண்டதில் மீன்களை பிடிப்பதற்கு பூபதி உறவினர்கள் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இறந்த சிறுவனின் உறவினர்களான கங்கா தரன், தமிழரசன், மோகன் ராஜ் ஆகியோர் போலீசார் கைது செய்துள்ளனர். 


Tags : Trichy , Man ,bitten ,bullet ,Trichy.
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...