சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறிய 4,61,582 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு்தாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,15,938 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை, ரூ11,61,68,139 வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, 5,70,892 எனவும் காவல்துறை கூறியுள்ளது.