சென்னை: குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை உணர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.