கொல்கத்தா: வருகிற நடப்பாண்டில் ஐ.பி.எல். தொடரை நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது. தொடரை நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் அளித்துள்ளார். மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாமா என்றும் ஆலோசனை நடக்கிறது. ஐ.பி.எல். தொடரில் பங்குபெற ரசிகர்கள், ஸ்பான்சர்கள், பங்குதாரர்கள் என அனைவரும் காத்திருக்கின்றன என்று கங்குலி தெரிவித்துள்ளார்.