×

திருவனந்தபுரத்தில் நடந்த கொடூரம்; மாஜி கிரிக்கெட் வீரர் அடித்து கொலை: 2 நாள் சடலத்துடன் இருந்த மகன் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரை கொன்று நாடகமாடிய மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவனந்தபுரம் மணக்காடு அருகே முக்கோலக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன் தம்பி (63).   எஸ்பிஐ முன்னாள் துணை மேலாளர். கேரள அணிக்காக ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகள் விளையாடி உள்ளார். இவரது மனைவி அனிதா. கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு அஸ்வின் (34)  என்ற மகன் உள்ளார். திருமணமாகவில்லை. முக்கோலக்கல் வீட்டில்  இருவரும் வசித்து வந்தனர். இவர்களது வீட்டு மாடி பகுதியை வாடகைக்கு  விட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து மாடியில் வாடகைக்கு இருந்தவர்கள் கீழே வந்து வீட்டிற்குள் பார்த்தனர். அப்போது முன்பக்க அறையின் தரையில் ஜெயமோகன் தம்பி இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து ேபார்ட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத  பரிசாேதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஸ்வினிடம் விசாரணை நடத்தினர். அப்போது தந்தை வழக்கமாக தரையில்தான் படுத்து தூங்குவது வழக்கம்.

அதனால் தனக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை என கூலாக பதில் கூறியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில், தலையில் பலத்த காயம்  ஏற்பட்டதால் ஜெயமோகன் தம்பி இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அஸ்வினிடம் போலீசார்  கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். முதலில், தான் மது அருந்தியதால் எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளார். பின்னர் தந்தையை தான் கொன்றதை ஒப்புக்கொண்டார். கடந்த 6ம் தேதி இரவு தந்தையும் மகனும் ஒன்றாக வீட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். தந்தையின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி அஸ்வின் தாறுமாறாக செலவு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து ஜெயமோகன் தம்பி தட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு  ஏற்பட்டுள்ளது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வின் தந்தையின் தலையை பிடித்து சுவரில் மோதியுள்ளார். இதில் ஜெயமோகன் தம்பி இறந்து விட்டார். சனிக்கிழமை அவர் இறந்த பின் ஞாயிறு முழுவதும் சடலம் கிடந்த வீட்டிலேயே அஸ்வின் இருந்துள்ளார். திங்கள் மதியம் விஷயம் வெளியே தெரிந்தது. அஸ்வினை போலீசார்  கைது செய்தனர்.

Tags : cricketer ,Trivandrum ,death ,Magi , Atrocity , Trivandrum; Magi cricketer, beaten, death,2-day-old son arrested
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...