பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காலியாகும் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் தொடங்கி முடிந்துள்ளது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் ஆதரவில் மஜத சார்பில் எச்.டி.தேவகவுடா, பாஜ சார்பில் ஈரண்ணா கடாடி மற்றும் அசோக் கஸ்தி மற்றும் சுயேச்சை ஒருவர் மனு தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 4 பேரின் மனு மட்டும் நேற்று ஏற்கப்பட்டுள்ளது. எனவே இந்த நான்கு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிகிறது.