தென்காசி: தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. கும்பகோணம், தென்காசி, செய்யாறு, மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் விதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் காரைக்காலில் 3 சென்டி மீட்டர் மழையும் நாகப்பட்டினத்தில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. அவிநாசி, சூளை,சேலையூர்,காசிக்கவுண்டன்புதூர், காமராஜ்நகர், உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது.மதுரையில் கருப்பாயூரணி, கோமதிபுரம், அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், கோரிப்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான, சமயநல்லூர், தேனூர், திருவேடகம், சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன்மழை பெய்தது. மதுரை அண்ணாநகரில் அரைமணி நேரம் மழை பெய்தது. ஆனால், மின்சாரம் தடைபடவில்லை.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், குச்சிபாளையம், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெரிது வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி; சின்னசேலம், நைனார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தென்காசியில் கனமழை பெய்துவருகிறது. இதனால் குற்றாலத்தில் சாரல் காற்று அடிப்பதால் குளிர்ச்சியாக உள்ளது.