சேலம்: சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் ஆரம்ப நிலையில் நோயை கண்டறிய முடிகிறது எனவும் கூறினார்.