×

கொரோனா வைரஸ்கள் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வந்து இருக்கலாம் :பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள்

டெல்லி : சார்ஸ், கோவ்-2 வைரஸ்கள்(கொரோனா) ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வந்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து வந்து பரவத்தொடங்கியது என்பது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குமார் சோமசுந்தரம், மைனக் மொண்டல், அங்கிதா லாவர்டே உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் ஆராய்ந்தனர்.அவர்கள், 294 இந்திய கொரோனா வைரஸ் மரபணு வரிசையை ஆராய்ந்து பார்த்தனர்.

அதில் இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த நாடுகள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர். இந்திய கொரோனா வைரஸ்கள், கூடுதலாக ஜி (50 சதவீதம்), ஐ (6.7 சதவீதம்) உயிரின கிளைகளால் (‘கிளேடு’களால்) செறிவூட்டப்பட்டவை ஆகும். 40 சதவீத மாதிரிகள், அறியப்படாத மரபணு வேறுபாடுகளை கொண்டுள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.

Tags : Bangalore ,India ,Europe ,researchers ,countries ,Middle East , Corona, Viruses, Europe, Middle East, India, Bangalore, Researchers
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...