சீனா: இந்திய-சீன எல்லையில் அமைதி திரும்ப இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ராணுவ, தூதரக ரீதியான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது என சீன அரசு தகவல் அளித்துள்ளது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.