×

கண்ணம்மாபேட்டை மயானத்தில் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம்; கண்ணீர் மல்க விடைகொடுத்த திமுக தொண்டர்கள்...!

சென்னை: இன்று காலை உயிரிழந்த திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க.வின் சென்னை மேற்கு மண்டல செயலாளராகவும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க.  எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். இவர் கடந்த 2-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில்  கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவருக்கு தொடர்ந்து, சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 8 மணியளிவில் ஜெ.அன்பழகன் காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் ஜெ.அன்பழகன் உடல் தமிழக சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஜெ.அன்பழகன் உடல்  தி.நகரில் உள்ள அவரது வீ்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் உடன் ஜெ.அன்பழகன் மகன், திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் சென்றனர். இருப்பினும், வீட்டில் முன் சிறிது நேரம் ஆம்புலன்சில் வைக்கப்பட்டது.  அப்போது, ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, ஜெ.அன்பழகன் தந்தை ஜெயராமன் அடக்கம் செயய்ப்பட்ட இடத்திற்கு அருகே ஜெ.அன்பழகன் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம்  செய்வதை காண திமுக தொண்டர்கள் கண்ணம்மாபேட்டை மயானத்தில் குவிந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : volunteers ,DMK ,Tiruvallikeni MLA , Tiruvallikeni MLA at Kannammapet Mayanam J.Abalance Body Wellness; DMK volunteers say goodbye to tears
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...