பீகார்: பாட்னாவைச் சேர்ந்த விலங்கு காதலரான அக்தர் இமாம் தனது முழு சொத்தையும் தனது இரண்டு யானைகளான மோதி மற்றும் ராணிக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து அக்தர் கூறுகையில், விலங்குகள் மனிதர்களைப் போலல்லாமல் உண்மையுள்ளவை ஆகும். எனது யானைகளின் பாதுகாப்பிற்காக நான் பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். என் மரணத்திற்குப் பிறகு என் யானைகள் அனாதையாக இருப்பதை நான் விரும்பவில்லை என அக்தர் தெரிவித்தார்.