சென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜெ.அன்பழகனின் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு..
ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம்
இழந்தார் தலைவர் ஸ்டாலின்.
செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம்.
உறுதிப்பொருள் உரைக்கும் உறுப்பினரை
இழந்தது சட்டமன்றம்.
என் நண்பரை இழந்தேன் நான்.
மரணம் கொடிது;
கொரோனா மரணம்
கொடிதினும் கொடிது.
ஆழ்ந்த இரங்கல்
இயக்கத்தார்க்கும்; இல்லத்தார்க்கும்
இவ்வாறு கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.