×

கொரோனாவால் ஜெ.அன்பழகன் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது : டிடிவி தினகரன் வருத்தம்!!

சென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெ.அன்பழகன். இவர் காய்ச்சல் காரணமாக கடந்த 2ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். உயிரிழந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 பிறந்த நாள் ஆகும்.

இந்நிலையில் ஜெ அன்பழகனின் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறேன். கொரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது. கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன். அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற  பிரார்த்திக்கிறேன்.  அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : disappearance ,Corona ,DDV Dinakaran , Corona, J.Application, death, agony, DTV
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...