×

அரசு பஸ்சில் கிருமிநாசினி தெளித்த மெக்கானிக் பலி

மதுரை: மதுரை, மேலப்பொன்னகரம் 6வது தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (52). இவர் மதுரை புதுக்குளம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நேற்று இவர் பஸ்சுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தபோது திடீரென்று மயங்கி விழுந்து  இறந்தார். இதுதொடர்பாக அவரது மகன் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் வினயிடம் கொடுத்த மனுவில் கையுறை  கூட தராமல் தமிழ்செல்வனை கிருமிநாசினி தெளிக்கும்படி மேலாளர் கட்டாயப்படுத்தியதால் அவர் இறந்துள்ளார். எனவே கொரோனா இழப்பீடு போல், குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags : mechanic , Government bus, mechanic, kills
× RELATED திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை