×

இமாச்சல் டிஜிபி அலுவலகம் சீல்

சிம்லா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். இவர் கடந்த 1ம் தேதி இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் காவல்துறை தலைமையகத்துக்கு சென்று வந்துள்ளார். மேலும், டிஜிபி உட்பட மேலும் சில அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அதே நாளில் அவர் டெல்லி திரும்பியுள்ளார். இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, இமாச்சல் காவல் துறை தலைமையகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தில் கிருமி நாசினி அடித்து தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, முன்னெச்சரிக்கையாக டிஜிபி சஞ்சய் குண்டு மற்றும் சுமார் 30 போலீசார் தாங்களாகவே வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.


Tags : DGP ,Himachal , Himachal, DGP Office, Seal
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...