×

கர்ப்பிணி மனைவியை போராடி தாய்நாட்டுக்கு அனுப்பிய கணவர் துபாயில் மரணம்: தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்  நிதின்சந்திரன் (29). சமூக சேவகர். துபாயில் கடந்த 3  ஆண்டுகளாக  மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஆதிராவும்   துபாயில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த  நிலையில்  ஆதிரா கர்ப்பிணியானார். இந்த சமயத்தில்தான் கடந்த மார்ச் மாதம்  லாக்-டவுன்  கொண்டு வரப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் சிக்கிய  லட்சக்கணக்கான  இந்தியர்கள் தாய் நாட்டுக்கு வரமுடியாமல் தவித்தனர்.

இந்த  நிலையில் ஆதிரா  வெளிநாடுகளில் சிக்கியுள்ள கர்ப்பிணிகள் உட்பட அனைவரையும்  இந்தியா கொண்டு  வர நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இதன் பிறகுதான் ‘வந்தே பாரத்’ திட்டத்தை மத்திய அரசு  செயல்படுத்த தொடங்கியது. இதையடுத்து கடந்த மே முதல்வாரத்தில்  வளைகுடா நாடுகளில் இருந்து  இந்தியர்கள் விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு  வந்தனர். இதன்படி மே 7ம் தேதி கேரளா  வந்த முதல் விமானத்திலேயே ஆதிராவும்  வந்து சேர்ந்தார். அவரை வழியனுப்ப  நிதின்சந்திரனும் விமான நிலையம் வரை  சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நிதின்சந்திரன்  படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை. அவரது  அறையில் உடன்  தங்கியிருந்தவர்கள் பார்த்தபோது அவர் இறந்திருந்தது  தெரியவந்தது. இதையடுத்து உடல் உடனடியாக துபாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு தூக்கத்திலேயே  மாரடைப்பு ஏற்பட்டு நிதின்சந்திரன் உயிர் பிரிந்தது தெரியவந்தது.

Tags : Thailand ,Dubai Pregnant ,Death ,Dubai , Pregnant, Husband, Dubai, Death
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...