×

இந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில் இருந்து இருதரப்பு படைகளும் பின்வாங்கியது; உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து முடிவு

கல்வான்: இந்திய, சீன எல்லையான லடாக் பகுதியில் இருந்து இருதரப்பு படைகள் விலகின. இருதரப்பு படைகளும் 2.5 கி.மீ தொலைவுக்கு பின்வாங்கியதாக தகவல் தெரிய வந்துள்ளது. கல்வான் என்ற பகுதியில் இருந்து சீனப்படை பின்வாங்கியது; இந்திய ராணுவமும் விலகியது. இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர் கள் அத்துமீறி நுழைந்தனர். இதன் காரணமாக மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மே 9-ம் தேதி சீன ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லைக்குள் நுழைய முயன்றபோது இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக இந் தியா, சீனா இடையே காணொலி காட்சி மூலம் 12 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின்னும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் உடனடியாக வெளி யேற வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணித்து அமைதி வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவும் இந்தியாவும் சம்மதித்துள்ளன.

தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சீனா, இந்தியா இடையிலான எல்லை பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்படும். தற்போது எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. கடந்த 6-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்தது. இந்நிலையில் இந்திய, சீன எல்லையான லடாக் பகுதியில் இருந்து இருதரப்பு படைகள் விலகின. இருதரப்பு படைகளும் 2.5 கி.மீ தொலைவுக்கு பின்வாங்கியதாக  தகவல் தெரிவித்துள்ளது. கல்வான் என்ற பகுதியில் இருந்து சீனப்படை பின்வாங்கியது, இந்திய ராணுவமும் விலகியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : border ,Indo ,Chinese ,negotiations ,Ladakh ,Border Ladakh , Indian - Chinese border, Ladakh, bilateral force, high level negotiations
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது