×

உ.பி.யில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சிறுவன் கொலை: கோயிலுக்குள் சென்றதால் பிற சாதியினர் சுட்டுக்கொன்றனர்

அம்ரோஹா: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கோயிலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்த பட்டியல் வகுப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். தலைநகர் லக்னோவில் இருந்து வடகிழக்கே 400 கி.மீ தொலைவில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் தான் இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. தும்கேரா என்னும் கிராமத்தை சேர்ந்த 17 வயதான விகாஸ் குமார் ஜாதவ் கடந்த சனிக்கிழமையன்று அங்கிருந்த சிவன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த பிற சமூகத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் அவரை தடுத்ததோடு, எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

ஆனால், அதனையும் மீறி அந்த சிறுவன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சிறுவன் விகாஸ் குமார் ஜாதவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் 2 நாட்கள் கழித்து சிறுவனின் வீட்டிற்கு சென்ற 4 இளைஞர்கள், சிறுவனை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாக சிறுவனின் தந்தை ஓம் பிரகாஷ் ஜாதவ் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். தீண்டாமை படுகொலைகள் மிக அதிகமாக நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் சிறுவன் விகாஸ் குமார் ஜாதவின் கொலை மற்றுமொரு கொலையாக பதிவாகியுள்ளது.

Tags : Murder ,Scheduled Tribe ,caste youth ,UP ,Temple , Uttar Pradesh, Dalit, boy, murder
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு