×

விஷம் வைத்து கொலையா ? :அஸ்ஸாமின் நீர்த்தேக்கத்தில் 13 குரங்குகள் செத்து மிதந்தன

சில்சார்: கிழக்கு அஸ்ஸாமின் கச்சர் மாவட்டத்தில் உள்ள சில்சார் என்னும் பகுதியில், கதிரலி நீர் விநியோக மையத்திற்குச் சொந்தமான சிறிய  நீர்த்தேக்கத்தில் 13 குரங்குகள்: செத்து மிதந்தன. வனத்துறையினர், குரங்குகளின் உடல்களை மீட்டு வனத்துறை ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில், உடல்களில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. விஷமிகள் யாரோ தீய நோக்கத்துடன் நீர்த்தேக்கத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்று வன காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Tags : Assam ,reservoir Kill ,reservoir , Poison, kill, assam, reservoir, 13, monkeys, dead, floated
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...