சென்னை: தமிழகத்தில் 11 கைதிகளுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றது. தமிழக சிறைகளில் பரோலில் சென்றுள்ள கைதிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. பரோலில் சென்றுள்ள 11 கைதிகளும் வரும் 15-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.