சென்னை: செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா நிலவரம் குறித்த வீடியோ பதிவிட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வழக்குப்பதிவு. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் எனவும் கூறினார்.