×

குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த கரடியை கல்லால் அடித்து விரட்டிய பொதுமக்கள்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை சூறையாடுவது, மேலும் குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு தேனீக்கள் கூண்டிலிருந்து தேன் எடுக்க கிராமத்திற்குள் நுழைவது போன்ற செயல்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள கரோலினா மற்றும் கரிமரா பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்து குடியிருப்பு நோக்கி வந்த கரடியை கிராம மக்கள் ஒன்றாக இணைந்து கல்லால் அடித்து விரட்டியடித்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை 2 நாட்களுக்கு பணிக்கு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Tags : Civilians ,town ,Gunnur Coonoor , Civilians, town, Coonoor
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி