சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச இணையதளம் குறிக்கிடுவதாக மனுவில் குறிப்பிட்டு சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.