×

ஒடிசாவில் பயிற்சியின் போது பெண் விமானி உயிரிழப்பு.: பெண் விமானியின் உருக்கமான தகவல்

ஒடிசா: ஒடிசாவில் விமான பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் தந்தையும் பணியின் போது தான் உயிரிழந்தார் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.  ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமான தளத்தில் சிறிய ரக விமானம் மூலம் மாணவர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது திடீரென சிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தமிழகத்தை சேர்ந்த இளம் பெண் அனீஸ் பாத்திமா(20) மற்றும் பயிற்சி விமானிவும் உயிரிழந்தனர். சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் விமான நகரை சேர்ந்த அனீஸ் பாத்திமாவின் உடலை சென்னைக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அவரது சகோதரர் அனுப் ஒடிசா சென்றுள்ளார்.

பயிற்சி விமானி அனீஸ் பாத்திமாவின் உடலை சொந்த ஊரான ராஜாப்பாளையம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அனீஸ் பாத்திமாவின் தந்தை முகமது வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் உயர் காவல் பயிற்சியகத்தின் உதவி ஆணையராக பணியாற்றி வந்துள்ளார். பணியில் இருக்கும்போது அவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. தந்தையை போலவே மகளும் பயிற்சியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


Tags : pilot ,Odisha , Female, pilot, dies ,training ,Odisha
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...