×

டிக்டாக்கில் பெண்கள் குறித்து அவதூறு பதிவு: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: டிக்டாக் செயலியில் பெண்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பதிவு செய்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன் ேநற்று அளித்த புகார் மனு: ‘சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் முகநூல் வீடியோ மற்றும் டிக்டாக் செயலி மூலம் ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை ஆபாசமாகவும், கீழ்த்தரமாக தொடர்ந்து மணிகண்டன் என்பவர் பேசி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் நடைபெறாமல் இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : women ,Commissioner ,Office , Report ,slander , women , dicta, Complaint to Commissioner's office
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...