×

மின்வயரில் உரசி வாகனங்கள் எரிந்து சேதம்

பூந்தமல்லி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (49). கன்டெய்னர்  லாரி டிரைவர். லோடு ஏற்றுவதற்காக சென்னைக்கு  கன்டெய்னர் லாரியை ஒட்டி வந்துள்ளார்.  கன்டெய்னர் பழுதானதால் நேற்று மாலை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம்,  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் இடத்திற்கு கண்டெய்னர் லாரியை எடுத்து வந்தார். அந்த பகுதியில் மேலே  இருந்த உயர் அழுத்த மின்சார வயர் மீது கன்டெய்னர் லாரி உரசியதில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்டதும் டிரைவர் வாகனத்திலிருந்து குதித்து தப்பிட்டு விட்டார்.

தீ அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மற்றும் மோட்டார் சைக்கிளுக்கும் பரவியதில் மூன்று வாகனங்களும் தீப்பிடித்து மள மளவென எரிய ஆரம்பித்தது. தகவலறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.  இந்த தீ விபத்தில் 3 வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானது.


Tags : Poonthalli, fertilizer vehicles, burns
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...