×

திருந்தி வாழ்வதாக 38 ரவுடிகள் பிணையப்பத்திரம் தாக்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது ரவுடிகளின் கூடாரமாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும்படி எஸ்பி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார், 13 ரவுடிகளை அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர். மேலும் 38 ரவுடிகளிடம், சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்களிடம் ஆஜர்படுத்தப்பட்டு, குற்றச் செயல்களில் இருந்து திருந்தி ஒழுக்கமாக வாழ எச்சரித்து ஓராண்டுக்கு எழுத்து மூலமாக நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டது.

Tags : Rowdies ,Routes ,Network Paper ,Kanchipuram , Kanchipuram, 38 Routes, Network Paper, Filing
× RELATED நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன்...