டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அனைத்து மாநில காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என்றும் மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பினால் தேவையான உதவியை செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.