×

திருச்சியில் இறைச்சியில் வெடி வைத்து நரி வேட்டை : 12 பேரிடம் போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம் : கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்தது போன்று திருச்சியில், இறைச்சியில் வெடி வைத்து நரி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீயபுரம் அருகே சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த 12 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து வாய் கிழிந்த நிலையில் இருந்த நரியை மீட்டனர். இது குறித்து போலீசார் கூறும்போது, இறைச்சியில் வெடிவைத்து நரி வேட்டையாடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் பிடிபட்ட 12 பேரும், இறந்து கிடந்த நரியை எடுத்து சென்றதாக கூறி வருவதாகவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.


Tags : Fox-hunting ,Trichy , Trichy, meat, explosives, fox hunting, police, investigation
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...