×

மதுரையில் டிக்டாக் மூலம் ரூ.97,000 இழந்த இளைஞர்.: இளம்பெண் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பிய இளைஞர்

மதுரை: மதுரையில் டிக்டாக் மூலம் சுமார் ரூ.97,000-ம் பணத்தை இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் பறிகொடுத்துள்ளார். எலிஸ் நகரை சேர்ந்த ஐ.டி  ஊழியரான ராமசந்திரன் என்பவர் சமூகவலைத்தளத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சசி என்ற பெண் டிக்டாக் மூலம் அவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

இளம் பெண் சசியிடம் ராமசந்திரன் நட்புக் கொண்டு பேசி வந்துள்ளார்.இந்தநிலையில் வீட்டு வாடகை தர வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறி ராமசந்திரனிடம் சசி அடிக்கடி பணம் கேட்டு உள்ளார். ராமசந்திரனும் கேட்டும் போதெல்லாம் பணத்தை கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு பின்னர் சசி தனது வலைதள கணக்குகளை முடக்கிவிட்டு தலைமறைவான பின்னரே தான் ஏமாற்றப்பட்டுள்ளதை ராமசந்திரன் உணர்ந்துள்ளார். இதுதொடர்பாக ராமசந்திரன் அளித்த புகாரின் பெயரில் எஸ்.எஸ்.காலணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Madurai ,teenagers ,tiktak ,Teenager , Rs .97,000, teenager ,youth ,Madurai ,tiktak ,Youth
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...