×

திடீர் தீ விபத்தில் 6 குடிசைகள் சாம்பல்

பெரம்பூர்: வியாசர்பாடி ஏ-கல்யாணபுரம் 3வது குறுக்கு தெருவில் நேற்று காலையில்  ஒரு குடிசை வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பக்கத்து குடிசைகளுக்கும் தீ பரவி அருகருகே இருந்த 6 குடிசைகள் கொழுந்து விட்டு எரிந்தன. அந்த வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து சத்தியமூர்த்தி நகர், செம்பியம், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 6 குடிசைகள் மற்றும் அவற்றில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

இதில், ஊர்க்காவல் படையை சேர்ந்த சரஸ்வதி (33), பழனி (40), பாலகிருஷ்ணன், வேலன் ஜெயமூர்த்தி, அப்புன்ராஜ் ஆகியோரது வீடுகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த ஒரு ஆட்டோவும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கு  மின்கசிவு காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : fire , Fire, 6 huts, ash
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா