×

பேப்பர் கம்பெனியில் தீவிபத்து

புழல்: செங்குன்றம் அருகே ஆங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட செம்பிலியாவரம் - சிறுணியம் செல்லும் சாலையில், பேப்பர் ரோல் தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இங்கு பாதுகாப்பு பணியில் 2 காவலாளிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இந்த கம்பெனியில் உள்ள பேப்பர் ரோல்களில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதை பார்த்ததும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர், சோழவரம் காவல் நிலையம், செங்குன்றம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர், மணலி, செம்பியம் ஆகிய பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, நேற்று இரவு வரை தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த பேப்பர் ரோல்கள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இதனால் செம்பிலியாவரம், சிறுணியம், சோழவரம், ஆங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து, மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து, மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.

Tags : Paper Company , Paper Company, Fireplace
× RELATED கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு...