×

அ.தி.மு.க.வில் இணையுமாறு தொழில்அதிபர்களுக்கு அமைச்சர் மிரட்டல்: திருப்பூர் சுப்பராயன் எம்.பி. பேட்டி

கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே நாதிபாளையத்தில் திருப்பூர் சுப்பராயன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:  கோபிசெட்டிப்பாளையத்தில் தி.மு.க.வை சேர்ந்த தொழிலதிபர்களை அ.தி.மு.க.வில் இணையுமாறு அமைச்சர் செங்கோட்டையன் மிரட்டி வருகிறார். அ.தி.மு.க.வில் இணையாவிட்டால் தொழில் செய்ய முடியாது எனவும் மிரட்டி வருகிறார்.  அவர் யார் யாரை மிரட்டினார்? என்பதை தேவைப்பட்டால் ஆதாரத்தோடு நிரூபிப்பேன். அதேபோன்று கோபி, நம்பியூர் உள்ளிட்ட பகுதியில் அதிகளவு கிராவல் மண் கடத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இவ்வாறு சுப்பராயன் எம்.பி. கூறினார்.

Tags : Thirupur Subarayan ,Interview ,business leaders ,AIADMK , Minister Thirupur Subarayan MP, threatens, business leaders,join AIADMK Interview
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...