×

கேரளாவில் தெரு நாயின் வாயில் இறுக்கமாக ஒட்டப்பட்ட டேப் : உணவு, தண்ணீர் இல்லாமல் 2 வாரங்கள் வேதனையுடன் சுற்றித்திரிந்த அவலம்!!

திருவனந்தபுரம் :  கேரளாவில் தெரு நாயின் வாய் பகுதியில் டேப் போட்டு கட்டியுள்ள செய்தி மீண்டும் விலங்குகள் நல ஆர்வலர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.2 வாரங்களுக்கு முன்பு ஒல்லூர் தெருநாய் ஒன்று வாயில் டேப்புடன் எதுவும் சாப்பிட முடியாமல் தெருவில் அலைந்து திரிந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திருச்சூர் விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தெருநாய் இருந்த இடத்திற்கு விலங்கு நலத்துறையினர் வந்தும் நாயை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

தெரு நாய் குரைத்துக் கொண்டே இருப்பதால் இது போன்று செய்துள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டு வாரங்களுக்கு பின் பாதிக்கப்பட்ட  நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாயின் வாயை சுற்றி பல அடுக்குகளாக பலமாக டேப் ஒட்டப்பட்டிருதுந்தது. இதனால், நாயால் வாயை திறக்க முடியவில்லை. உணவு சாப்பிட முடியாமல் தவித்துள்ளது.

டேப் அழுத்தி ஒட்டப்பட்டதால், அதன் நாசி எழும்புகள் முறிந்து போயுள்ளன. வாயின் மேல் தோல் பகுதியிலும் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. நாயினை மீட்ட விலங்குகள் நல அமைப்பினர் டேப்பை அறுத்தெடுத்தவுடன் சுமார் 2 லிட்டர் தண்ணீரை அந்த நாய் குடித்ததாக விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன் நியூஸ்மினிட் இணையதளத்திடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாய் மருத்துவ சிகிச்சையால் உடல்நிலை முன்னேறி வருகிறது.

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய தேங்காயை சாப்பிட்டதால், வாயில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் கேரளாவில் மற்றோரு விலங்குக்கு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Tags : Kerala , Kerala, Street Dog, Tight, Tape, Food, Water, 2 Weeks, Pain, Suffering
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...