×

ஊடகவியலாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கொரோனா பாதித்த உறவினருக்கு மருத்துவமனையில் இடமில்லை என்று கூறிய ஊடகவியலாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருந்தே இல்லாத நிலையில் 56% பேரை குணப்படுத்தியுள்ளோம். சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தாக்கம் இல்லை, என கூறியுள்ளார். 


Tags : Varadarajan ,Minister Vijayabaskar , Journalist Varadarajan, Minister Vijayabaskar
× RELATED மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி