மதுரை: முன்களப் பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணம் தரக்கோரிய வழக்கில் மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற கிளையின் வரம்புக்குட்பட்ட மாநகராட்சிகளில் இதே நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணத்துடன் பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.