புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படவுள்ளது. காய்ச்சல், இருமல் காரணமாக கெஜ்ரிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட கெஜ்ரிவால் தற்போது தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.