சென்னை: தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகளவில் இல்லை என்பதால் சமூகப் பரவல் அதிகரித்துள்ளது என்று விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தோரின் சதவிகிதத்தை அரசு குறைத்து காட்டுவது மிகவும் ஆபத்தானது என்றும், கொரோனாவை தடுப்பதை விட அதை கொடுப்பதில் தான் அரசு முனைப்பாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.