×

திம்பம் மலைப்பாதையில் லாரி சாய்ந்து விபத்து

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் மர பாரம் ஏற்றிய லாரி சாய்ந்து விபத்துக்குள்ளானது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்துள்ள குஷால் நகரில் இருந்து மர பாரம் ஏற்றிய லாரி, கோவை செல்வதற்காக நேற்று மதியம் திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது.

லாரியை அந்தியூரை சேர்ந்த டிரைவர் அன்பழகன் ஓட்டினார்.லாரி ஏழாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரியில் ஏற்றப்பட்டு இருந்த மரம் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால், லாரியும சாய்ந்தது. இதனால், மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Lorry crash , Lorry crash , Timbam, hillside
× RELATED மணப்பாறை அருகே லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலி