×

ஒடிஷாவில் காட்டுக்குள் தனி ஒருவராக தங்கிய தொழிலாளி.:கொரோனா அச்சத்தால் ஊருக்குள் நுழைய அனுமதிக்காத கொடுமை

ஒடிஷா: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய ஒடிஷா தொழிலாளியை அவரது சொந்த கிராமத்தினரே விரட்டி அடித்த கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒடிஷா மாநிலம் பேகம்பூர் அருகே பிஞ்சேரி என்ற கிராமத்தை சேர்ந்த பாரிக் நாயக் என்பவர் சென்னையில் இருந்து சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.  

ஆனால் கொரோனா பரவல் குறித்த அச்சத்தால் அவரை ஊருக்குள் நுழைய விடாமல் சொந்த கிராமமக்கள் விரட்டி அடித்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று பாரிக் நாயக் அவரை  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். காட்டிற்குள் தரையில் தூங்கிக்கொண்டிருந்த பாரிக் நாயக்கின் பரிதாப நிலையை கண்ட காவல்துறையினர் அவரை மீட்டு தனிமை முகாம்க்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று ஒடிஷா அரசு தெரிவித்துள்ளது.


Tags : Odisha ,forest ,village ,Corona , Odisha,forest , worker ,alone, Corona ,village
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை