×

தண்ணீர் தொட்டியிலிருந்து குதித்து பி.டெக் பட்டதாரி தற்கொலை: ஊரடங்கால் வேலையிழந்த விரக்தி

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள கோம்பை ரோட்டைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது பேரன் அசோக்குமார் (28). பி.டெக் பட்டதாரி. இவரது பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதால், சிறு வயது முதல் பாட்டி வீட்டிலிருந்து அசோக்குமார் படித்து வந்தார். பி.டெக் முடித்தவுடன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  கொரோனா ஊரடங்கால் அந்த நிறுவனம் மூடப்பட்டதால், 2 மாதத்திற்கு முன் அசோக்குமார் வேலையிழந்து கம்பம் திரும்பினார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த அசோக்குமார் நேற்று அதிகாலை அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மேலே ஏறி அங்கிருந்து குதித்தார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : B.Tech , B.Tech graduate ,suicide,jumping, tank , water: frustration with curfew
× RELATED பி.இ., பி.டெக் படிப்புகான துணை கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு