×

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தயார் நிலையில் முககவசங்கள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: 10ம் வகுப்பு தேர்வுக்கு வரும் ஆசிரியர், மாணவருக்கு வழங்க தேவையான முககவசங்கள் தயார் நிலையில் உள்ளது என திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொது தேர்வை 21,280 மாணவர்கள், 24,855 மாணவிகள் என மொத்தம் 46,135 பேர் எழுத உள்ளனர். இது தவிர பிளஸ் 1 விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில், அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுக்கான நுழைவு சீட்டு வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு வரும் மாணவர், தேர்வு அறை கண்காணிக்கும் ஆசிரியர்களுக்கு முககவசம் வழங்கப்படும். இம்மாணவர்களுக்கு முதலில் 2 முககவசம் (மறு சுழற்சி மாஸ்க்) ஆசிரியர்களுக்கு 3 முககவசம் வழங்கப்படும். பிளஸ் 1 மாணவர்களுக்கு தலா ஒரு முககவசம் வழங்கப்படும். இதற்கு தேவையான முககவசங்கள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Facilities ,Collector Information 10th Floor Facing Facilities: Collector's Information , 10th Floor Facing, Facilities, Collector's Information
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...