சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். இது மாணவர்கள் உயிரை வைத்து ஆட்சியாளர்கள் விளையாடுகின்ற அபாயகரமான ஆட்டமாகும், மாணவர்கள் மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் நோய்த் தொற்று பரவ காரணமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.