×

முன்னாள் கால்பந்து வீரர் பாலசாமி மரணம்

சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் நிர்வாகியும், மூத்த கால்பந்து வீரருமான பாலசாமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை பிராட்வேயை  சேர்ந்தவர் ஏ.பாலசாமி (82). கால்பந்து வீரரான அவர், மெட்ரோஸ் கால்பந்து சங்க லீக் போட்டிகளில்  பிராட்வே டான் பாஸ்கோ அணிக்காக முதலில் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து பின்னி மில் அணிக்காவும், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த மினர்வா ஃபுட்பால் கிளப்புக்காகவும் விளையாடியுள்ளார். பின்னர் இந்த கிளப்பின் செயலாளராகவும், மெட்ராஸ் யுனைட்டட் கிளப் (எம்யுசி) செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் கால்பந்து பிரிவு பொறுப்பாளராகவும்  பாலசாமி இருந்துள்ளார்.

மெட்ராஸ் கால்பந்து சங்கம், தமிழ்நாடு கால்பந்து சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக  பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள்  செயலாளர் டேவிட் ராஜ்குமார், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள், கால்பந்து வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Balasamy ,Death ,footballer , Death , former footballer Balasamy
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...