×

காஷ்மீரில் தாக்குதல் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரேபான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ,தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வீரர்கள்  தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சண்டையில் வீரர்களுக்கு எ்ந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கலோனல் ராஜேஷ் காலியா தெரிவித்தார்.

இதற்கிடையே, நவ்காம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், கடந்த 3ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் அவசரத்தில் அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் கொண்ட பையை அங்கேயே விட்டு விட்டு தப்பி விட்டனர். இதனால், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.



Tags : militants ,Kashmir , 5 militants shot, dead,Kashmir
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி