×

பட்டம் விட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு

பெரம்பூர்: அயனாவரம் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் காற்றாடி பறக்க விடுவதாக அயனாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார் திடீர் சோதனை நடத்தி, அயனாவரம் மதுரை தெரு பழனி ஆண்டவர் கோயில் தெரு, குருவைய்யா மேஸ்திரி தெரு, பெரியார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கேகே நகர் 5வது தெரு ஆகிய பகுதிகளில் காற்றாடி பறக்கவிட்ட 8 பேரை பிடித்தனர்.  இவர்களில் 5 பேர் சாதாரண நூலை பயன்படுத்தி காற்றாடி விட்டதால்  அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும், 3 பேர் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி விட்ட ஜானகிராமன் (25), முகமது (34), குப்புசாமி (31) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டர்.


Tags : graduates ,Case , Case filed, agains,t 8 graduates
× RELATED அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு...