×

சீயோன்நகரில் சாலையை ஆக்கிரமித்துள்ள முட்செடிகள்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

உடன்குடி: சீயோன்நகரில் சாலையோரங்களை ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமன்குறிச்சியில் இருந்து சீயோன்நகர், வெள்ளாளன்விளை வழியாக உடன்குடி செல்லும் முக்கியமான வழித்தடமாகும். தினமும் ஏராளமான வாகனங்கள், அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இந்நிலையில் சீயோன்நகரை யொட்டியுள்ள பகுதியில் சாலையோரங்களில் ஏராளமான முட்செட்டிகள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

மேலும் சாலையில் வளைவு பகுதியில் இருப்பதால் எதிரே வரும் வாகனங்ள் சரி வர தெரிய வாய்ப்பில்லாமல் உள்ளது. இதுகுறித்து அந்த பகுதிமக்கள் சம்பந்தபட்டவர்களிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் உடனே தலையீட்டு சாலையோர முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Zion City , Zion City, Road, Thorns
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...