×

வெட்டுக்கிளிகளை கவர்ந்து அழிக்கும் மின் வலை பொறி கருவி : திருச்சி என்ஜினீயரிங் மாணவர் அசத்தல் கண்டுபிடிப்பு!!

சேலம் : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர், குறைந்த செலவில் வெட்டுக்கிளிகளை கவர்ந்து அழிக்கும் மின் வலை பொறி கருவியை தயாரித்துள்ளார். சேலம் மாவட்டம் பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த உதயகுமார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வந்திருக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்.

வெட்டுக்கிளிகள் குறிப்பாக வெளிச்சத்தால் கவரும் தன்மை உடையது.அதனால் சிறு குண்டு பல்பு, அதை சுற்றி வெட்டுக்கிளிகள் நுழையும் அளவு இடைவெளியுடன் இரு அடுக்கு கம்பி வலை அமைத்து அதில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை வயல்களின் நடுவே வைத்தால் இரவு முழுவதும் வெட்டுக்கிளிகளை கவர்ந்து இழுத்து மின்சாரத்தால் தாக்கி அழித்துவிடும். இக்கருவியால் ஒரு நொடிக்கு 100 வெட்டுக்கிளிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது. தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு இல்லை. இனி வந்தாலும் அச்சப்பட வேண்டியதில்லை.

ஒரு ஏக்கர் வயலில் 4 முனைகளில் இதுபோன்ற கருவிகளை வைத்தால் 4 நாட்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் அழிக்கப்படும். கருவியின் அடிப்பரப்பில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்தால் இறந்த வெட்டுக்கிளிகளை எடுத்து உரமாக பயன்படுத்தலாம். இதனை தயாரிக்க ரூ. 11 ஆயிரம் செலவாகி உள்ளது.


Tags : Locust, destroyer, power web, engine, tool, product, Trichy, engineering, student, wacky, invention
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்